Skip to main content

உயில் முறையாக எழுதப்பட்டுள்ளதா ?

ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் நடைமுறையில் உள்ளது  என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளதா ?  என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்
=======================================================

      ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் நடைமுறையில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.

இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களில் ஒருவருடைய கையெழுத்தை தெரிந்துள்ள நபரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு கையெழுத்தை மட்டும் அடையாளம் காட்டுபவர் அந்த உயில் எழுதப்பட்டதை குறித்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சென்னை உயர்நீதிமன்றம் " ஜானகிதேவி Vs R. வசந்தி மற்றும் பலர் (2005-1-LW-455)" என்ற வழக்கில், இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 யைப் படித்து பார்த்தால், உயிலில் சாட்சிக் கையொப்பமிடுவதும், உயிலை எழுதுவதும் வெவ்வேறான சங்கதிகளாகும். ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருகிறது என்றும், ஒரு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தால், அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபித்து விட்டதாக கருத முடியாது, ஒரு வழக்கில் உயிலை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நிலையில் தான் உயில் பதிவு செய்யப்பட்டதற்காக இந்திய பதிவுச் சட பிரிவு 60 ன்படி சார் பதிவாளரால் வழங்கப்படுகின்ற சான்றிதழை, உயில் எழுதப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "கற்பகம் Vs E. புருஷோத்தமன் மற்றும் இருவர் (2010-3-LW-282)" என்ற வழக்கில், ஒரு உயில் எழுதப்பட்டது குறித்து மிகத் கடுமையாக மறுத்துரைக்கப்படாத நிலையில்,  உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=2672863806345303&id=100008651297183

எனவே ஒரு உயிலை நிரூபிப்பதற்கு அதில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களில் ஒருவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். யாரும் உயிருடன் இல்லாத பட்சத்தில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களின், கையெழுத்தை அடையாளம் காட்டக்கூடிய ஒருவரை சாட்சியாக விசாரித்து உயிலை நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

Comments

Popular posts from this blog

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்?

வருமான வரி 'ரீஃபண்ட்' தாமதமாவது ஏன்? எப்போது கிடைக்கும்? தோழர்களே, நம்மில் பலரும் உழைத்து ஈட்டிய வருமானத்திற்கு TDS என்ற வகையில் அரசுக்கு அதிகமாகச் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற (ரீஃபண்ட்) காத்திருக்கிறோம்.  வருமான வரித் துறையோ (Income Tax Department) இந்த ஆண்டு 7.5 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. ஆனால், இந்திய மக்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய பணம் ஏன் தாமதமாகிறது?  இதோ அதற்கான காரணங்களும், தீர்வுகளும்: ரீஃபண்ட் தாமதமாவதற்கு என்ன காரணம்? இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை, தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகர் தாமோதரன் கி  தெளிவாக எடுத்துரைக்கிறார்.  அதன் சாரம் இதுதான்: 1. தகவலில் உள்ள முரண்கள் (Data Mismatch) :  * முக்கியக் காரணம்: நீங்கள் தாக்கல் செய்த கணக்கு விவரங்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள 26AS, AIS (ஆண்டுத் தகவல் அறிக்கை), TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) போன்ற ஆவணங்களில் உள்ள தரவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் (Discrepancies) இருப்பதுதான் 90% தாமதங்களுக்குக் ...

What will happen tomorrow?

In the world of today, we seek an answer to the question, " What will happen tomorrow? " and so we contemplate the future. Especially, retirement, that period after our working years, presents itself as a formidable challenge, vast as an ocean. Our duty today is to consider whether we need a boat or a ship to cross that ocean. Physical assets like houses, land, and gold might have been symbols of pride in a bygone era. However, when we look at the issues they face today, we must realize that they can even turn into a burden.  My dear Friends! Do you know how many complications arise when you have to live off the money from selling a property or receiving income  after retirement, or even while selling it? 👉🏽. The Colossal Form of the Succession Dispute : In a family, the word 'property' has the danger of becoming a dagger that severs the bonds of affection. If family members object, saying, " _This is our ancestor's property, do not sell it,_ ...

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...